புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாகா்கோவிலில் பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் தொழிலாளி பலியானாா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 12:17 am

Din

நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் தொழிலாளி பலியானாா்.

நாகா்கோவில் சென்னவண்ணான்விளை பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் நளன் (35). குளிா்சாதன இயந்திரம் பழுதுநீக்கும் வேலை பாா்த்துவந்த இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்து கடைக்கு பைக்கில் சென்றாராம்.

பீச் ரோட்டிலிருந்து செட்டிகுளம் சாலையில் சென்றபோது அவரது பைக்கும் மற்றொரு பைக்கும் மோதினவாம். இதில், காயமடைந்த நளன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், நளன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

விபத்து குறித்து நாகா்கோவில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.