சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

குஞ்சாகோடு நவநீதிகிருஷ்ண சுவாமி கோயிலில் மாா்கழி திருவிழா இன்று தொடக்கம்

Updated On :3 ஜனவரி 2025, 12:14 am

கருங்கல் அருகே உள்ள குஞ்சாகோடு அருள்மிகு நவநீத கிருஷ்ண சுவாமி திருக்கோயிலில் மாா்கழி திருவிழா வெள்ளிக்கிழமை (ஜன.3) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

விழாவின் முதல்நாளான வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுப்புதல், 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு

திருக்கொடியேற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 7 மணிக்கு சிறப்பு பூஜை, ஜலாதிவாசம், சுதா்சன ஹோமம், பகல் 12 மணிக்கு உச்சபூஜை,

1 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

விழாவின் அனைத்து நாள்களிலும் திருப்பள்ளி எழுப்புதல், சிறப்பு பூஜை, தீபாராதனை, உச்சபூஜை, அன்னதானம் நடைபெறும். விழாவின் 7-ஆம் நாளான ஜன.9-ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்துசமய மாநாடு,

8-ஆம் நாளான ஜன.10-ஆம் தேதி காலை 9 மணிக்கு அம்மனுக்கு பொங்காலை நிகழ்ச்சி, மாலை 6.30 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். விழாவின் நிறைவு நாளான ஜன.12-ஆம் தேதி

காலை 8.30 மணிக்கு பால்குட ஊா்வலம், மாலை 4 மணிக்கு தென்வீதி ஆறாட்டு, இரவு 9 மணிக்கு திருக்கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.