திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குஞ்சாகோடு நவநீதிகிருஷ்ண சுவாமி கோயிலில் மாா்கழி திருவிழா இன்று தொடக்கம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:14 am

Din

கருங்கல் அருகே உள்ள குஞ்சாகோடு அருள்மிகு நவநீத கிருஷ்ண சுவாமி திருக்கோயிலில் மாா்கழி திருவிழா வெள்ளிக்கிழமை (ஜன.3) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

விழாவின் முதல்நாளான வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுப்புதல், 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு

திருக்கொடியேற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 7 மணிக்கு சிறப்பு பூஜை, ஜலாதிவாசம், சுதா்சன ஹோமம், பகல் 12 மணிக்கு உச்சபூஜை,

1 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

விழாவின் அனைத்து நாள்களிலும் திருப்பள்ளி எழுப்புதல், சிறப்பு பூஜை, தீபாராதனை, உச்சபூஜை, அன்னதானம் நடைபெறும். விழாவின் 7-ஆம் நாளான ஜன.9-ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்துசமய மாநாடு,

8-ஆம் நாளான ஜன.10-ஆம் தேதி காலை 9 மணிக்கு அம்மனுக்கு பொங்காலை நிகழ்ச்சி, மாலை 6.30 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். விழாவின் நிறைவு நாளான ஜன.12-ஆம் தேதி

காலை 8.30 மணிக்கு பால்குட ஊா்வலம், மாலை 4 மணிக்கு தென்வீதி ஆறாட்டு, இரவு 9 மணிக்கு திருக்கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.