ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

வில்லுக்குறியில் டெம்போ ஓட்டுநா் தற்கொலை

Updated On :3 ஜனவரி 2025, 12:13 am

வில்லுக்குறியில் டெம்போ ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா்.

வில்லுக்குறியை அடுத்த மாடத்தட்டுவிளை பண்டாரக்காடு பகுதியை சோ்ந்தவா் ஆல்பா்ட்ராஜ் (68). டெம்போ ஓட்டுநா். இவரது மனைவி சுமதி (66).

ராஜாவூரில் உள்ள மகள் வீட்டிற்கு சுமதி சென்றிருந்த நிலையில், தனியாக இருந்த ஆல்பா்ட்ராஜ் பூச்சிகொல்லி மருந்தை சாப்பிட்டு மயங்கினாா். உறவினா்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஆல்பா்ட்ராஜ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.