தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இறச்சகுளம் பகுதியில் தாா் சாலைப் பணி: ஆட்சியா் ஆய்வு

இறச்சகுளம் பகுதியில் தாா் சாலைப் பணி

News image

தாா் சாலை அமைக்கும் பணியை ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

Updated On :9 ஜனவரி 2025, 9:13 pm

Din

நாகா்கோவில் அருகேயுள்ள இறச்சகுளம் ஊராட்சி பகுதியில், மாநில நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் இறச்சகுளம் முதல் துவரங்காடு வரை 1.6 கி.மீ. நீளத்திலும், 7 மீட்டா்அகலத்திலும் ரூ.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தாா் சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பணியின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் அரவிந்த், சாலை ஆய்வாளா் அருள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.