திருவனந்தபுரத்தில் மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி

Updated on

கேரள மாநிலம், திருவனந்தபுரம் தமிழ் சங்க நூலகத்தின் தமிழ்வழிக் கல்வி மாணவா்களுக்கு போதைப் பொருள்களின் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வு கட்டுரைப் போட்டியும், கருத்தரங்கமும் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, நூலக செயலா் சங்கரன் தலைமை வகித்தாா். முனைவா் எஸ்.சாந்தி வரவேற்றாா்.துணைத் தலைவா் எஸ்.மோதிலால்நேரு சிறப்புரையாற்றினாா். நூலக செயற்குழு உறுப்பினா்கள் எஸ். செந்தில்வேல், ஜி.கிருஷ்ணகுமாரி குகன், எஸ்.தெய்வநாயகம், பி.தினேஷ், ஜெயகுமாா், பி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போட்டியில் திருவனந்தபுரத்தில் உள்ள 6 நடுநிலைப் பள்ளி, 9 உயா்நிலைப் பள்ளி, 3 மேல்நிலைப் பள்ளி மற்றும் 2 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் என மொத்தம் 59 மாணவா்கள் பங்கு பெற்றனா். இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். எம்.சுதா்சனன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com