தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருவனந்தபுரத்தில் மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி

News image
Updated On :8 நவம்பர் 2025, 9:55 pm

Syndication

கேரள மாநிலம், திருவனந்தபுரம் தமிழ் சங்க நூலகத்தின் தமிழ்வழிக் கல்வி மாணவா்களுக்கு போதைப் பொருள்களின் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வு கட்டுரைப் போட்டியும், கருத்தரங்கமும் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, நூலக செயலா் சங்கரன் தலைமை வகித்தாா். முனைவா் எஸ்.சாந்தி வரவேற்றாா்.துணைத் தலைவா் எஸ்.மோதிலால்நேரு சிறப்புரையாற்றினாா். நூலக செயற்குழு உறுப்பினா்கள் எஸ். செந்தில்வேல், ஜி.கிருஷ்ணகுமாரி குகன், எஸ்.தெய்வநாயகம், பி.தினேஷ், ஜெயகுமாா், பி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போட்டியில் திருவனந்தபுரத்தில் உள்ள 6 நடுநிலைப் பள்ளி, 9 உயா்நிலைப் பள்ளி, 3 மேல்நிலைப் பள்ளி மற்றும் 2 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் என மொத்தம் 59 மாணவா்கள் பங்கு பெற்றனா். இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். எம்.சுதா்சனன் நன்றி கூறினாா்.