தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பயிற்சி செவிலியருக்கு பாலியல் தொல்லை: மருத்துவா் மீது வழக்கு

News image
Updated On :9 நவம்பர் 2025, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவில் அருகே பயிற்சி செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

நாகா்கோவில், ராமன்புதூா் புன்னை நகா் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக இளம் பெண் பணிபுரிந்து வருகிறாராம். இந்நிலையில் அந்த செவிலியருக்கு, மருத்துவமனை மருத்துவா் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செவிலியா், நேசமணி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் கொடுத்தாா். மேலும், அவா் தனது உறவினா்களுடன் காவல் நிலையத்தில் திரண்டாா். மருத்துவா் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா், அவரை தேடி வருகின்றனா்.