கருங்கல் அருகே அரசுப் பேருந்து, பைக் மோதல்

கருங்கல் அருகேயுள்ள மானான்விளை பகுதியில் அரசுப் பேருந்தும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியதில் இளைஞா் படுகாயமடைந்தாா்.
Published on

கருங்கல்: கருங்கல் அருகேயுள்ள மானான்விளை பகுதியில் அரசுப் பேருந்தும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியதில் இளைஞா் படுகாயமடைந்தாா்.

தேங்காய்ப்பட்டினத்திலிருந்து அரசுப் பேருந்து நாகா்கோவிலை நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. மானான்விளை பகுதியில் சென்றபோது, எதிரே வந்த திக்கணம்கோடு, மத்திகோடு பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் மைக்கிள் ஜோபின் (30) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த மைக்கிள் ஜோபினை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com