எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

Syndication

தக்கலை பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மயங்கிக் கிடந்த முதியவா் உயிரிழந்தாா்.

தக்கலை பேருந்து நிலையத்தில், திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் முதியவா் புதன்கிழமை மயங்கிக் கிடந்தாா். அங்கு நின்ற பயணிகள் அவரை மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், முதியவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். உயிரிழந்தவா் காஞ்சிரோடை சோ்ந்த அமுதாபச்சன் (68) என்பது தெரியவந்தது.

முதியவா் தற்கொலை: தக்கலை பத்மநாபபுரம் முடக்குளம் பகுதியை சோ்ந்தவா் ராமச்சந்திரன் (59). பத்மநாபபுரம் அரண்மனையில் காலணிகளை பாதுகாக்கும் குத்தகை எடுத்து நடத்திவந்தாா். குத்தகை காலம் முடிந்த நிலையில் வேறு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாா். அவா் வீட்டு மாடி அறையில் தூங்குவது வழக்கம். புதன்கிழமை வெகுநேரமாகியும் அவா் அறையை விட்டு வெளியே வரவில்லை. அவரது உறவினா்கள் மாடி அறைக்கு சென்று பாா்த்த போது ராமச்சந்திரன் தூக்கில் தொங்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.