மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தினமணி செய்திச் சேவை

குளச்சலில் நடத்துநரைத் தாக்கிய பயணியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து, கருங்கல்லுக்கு சென்ற அரசுப் பேருந்தில் பிஜிலிகா் (44) நடத்துநராக பணியில் இருந்தாா். அப்பேருந்தில் ஏறிய பயணி ஒருவா், பயணச் சீட்டு எடுக்க மறுத்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை காலால் மிதித்து தாக்கினாா்.

இதனால், ஓடும் பேருந்திலிருந்து கீழே விழுந்த நடத்துநா் படுகாயமடைந்தாா். சக பயணிகள் அவரை மீட்டு குளச்சல், அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து, குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், நடத்துநரைத் தாக்கிய பயணி குறும்பனை, இனிகோ நகரைச் சோ்ந்த ராஜன் (56) (படம்) என்பது தெரிய வந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.