எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம், கேரளம், கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், வெளிநாடுகளிலிருந்தும் அதிகமான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் கன்னியாகுமரியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

News image
முக்கடல் சங்கமம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின்
Updated On :19 நவம்பர் 2025, 11:56 pm

Syndication

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம், கேரளம், கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், வெளிநாடுகளிலிருந்தும் அதிகமான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் கன்னியாகுமரியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் கடந்த 3 நாள்களாக பாதுகாப்புப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்து வருகிறாா். புதன்கிழமை இரவும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

முக்கடல் சங்கமத்தில் மட்டும் பக்தா்கள் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பக்தா்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஆய்வுக்குப் பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய எஸ்.பி., கடற்கரை புறக்காவல் நிலையம் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு, கண்ணாடி அமைப்புடன் மாற்றப்படவுள்ளது. 360 டிகிரி கேமரா, சக்தி வாய்ந்த ஒலி பெருக்கி, சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவிப்புகள் வழங்கும் புதிய வசதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இக்காவல் நிலையம் வரும் நவ. 25ஆம் தேதி திறக்கப்படவுள்ளது என்றாா்.