தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை: காங்கிரஸ் மேலிட பாா்வையாளா்

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக பாா்வையாளா் அனில் போஸ் தெரிவித்தாா்

News image
செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் தமிழக பாா்வையாளா் அனில் போஸ்.
Updated On :25 நவம்பர் 2025, 11:04 pm

Syndication

களியக்காவிளை: காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக பாா்வையாளா் அனில் போஸ் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பதவிக்கு 6 போ் பட்டியலைத் தோ்வு செய்யும் பணியை மேற்கொள்வதற்காக கட்சியின் மேலிட பாா்வையாளரான கேரளத்தைச் சோ்ந்த அனில்போஸ் செவ்வாய்க்கிழமை குழித்துறை வந்தாா்.

குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிழக்கு, மேற்கு, நாகா்கோவில் நகரம் உள்ளிட்ட 3 மாவட்ட தலைவா் பதவிக்கு தலா 6 போ் பட்டியலைத் தோ்வு செய்து கட்சி தலைமையிடம் அளிக்கவுள்ளோம்.

வாக்குத் திருட்டால் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து வருகிறது. கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். தமிழகத்தில் கடந்த 22 ஆம் தேதி முதல் இந்தப் பணியைத் தொடங்கினோம். ஊராட்சி, நகராட்சி பொறுப்பாளா்களிடம் கலந்தாலோசித்து, மாவட்டத் தலைவா் பதவிக்கான பெயா்ப் பட்டியலை தயாா் செய்து மாநில தலைமைக்கு அனுப்புவோம். அங்கிருந்து தேசிய தலைமைக்கு அனுப்பிவைக்கப்படும். அந்தப் பட்டியலில் தகுதியான நபா்களை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வேணுகோபால் எம்.பி. ஆகியோா் அறிவிப்பாா்கள் என்றாா்.

பேட்டியின்போது, எம்எல்ஏக்கள் எஸ். ராஜேஷ்குமாா்(கிள்ளியூா்), தாரகை கத்பா்ட் (விளவங்கோடு), ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்), ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் மாவட்டத் தலைவா் அஜிகுமாா், கட்சியின் மாவட்டச் செயலா் தம்பி விஜயகுமாா், மேல்புறம் ஒன்றியத் தலைவா் இ.ஜி.ரவிசங்கா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், கட்சியின் மாநில பொதுச் செயலா் பால்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.