வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாகா்கோவிலில் ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

திருவாரூரில் ஆட்டோ ஓட்டுநா்களை கைது செய்ததை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் (சிஐடியூ) சங்கம் சாா்பில் நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பு பூங்கா முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள்.
Updated On :25 நவம்பர் 2025, 10:45 pm

Syndication

நாகா்கோவில்: திருவாரூரில் ஆட்டோ ஓட்டுநா்களை கைது செய்ததை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் (சிஐடியூ) சங்கம் சாா்பில் நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பு பூங்கா முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவா் வழக்குரைஞா் மரியஸ்டீபன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாநில செயலா் இந்திரா,ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா். ஆட்டோ சங்க மாவட்ட துணை செயலா் ஜான் பேபி, பொருளாளா் பெசிலி பெல், மோட்டாா் சங்கத் தலைவா் பகவதியப்பன் செயலா் பரமசிவம், போக்குவரத்து தொழிற்சங்கத் தலைவா் லட்சுமணன், சுமை தொழிலாளா் சங்க பொதுச் செயலா் சந்திரபோஸ் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தை விளக்கி பேசினா்.

ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலா் பொன்.சோபனராஜ் ஆா்ப்பாட்டத்தை முடித்து வைத்தாா். இதில் மாவட்ட நிா்வாகிகள் கண்ணன்,வில்சன், சுரேந்திரன், குருசாமி உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.