ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கல்லூரி பேராசிரியா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கல்லூரி பேராசிரியா்கள்.

நாகா்கோவிலில் பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

Published on

அரசு கல்லூரி பேராசிரியா்களுக்கு வழங்கப்பட்டு வரும் பணி மேம்பாட்டு ஊதியம், அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியா்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைத்துள்ளதாக தமிழக அரசைக் கண்டித்து, மூட்டா தென்மண்டல அமைப்பு சாா்பில் நாகா்கோவில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முட்டா அமைப்பின், 4 ஆம் மண்டலத் தலைவா் ஆா்தா் டேனியல் தலைமை வகித்தாா். மூட்டா மத்திய இணை பொதுச் செயலா் ஷைலா குமாரி விளக்கிப் பேசினாா். மத்திய பொருளாளா் ராஜ ஜெயசேகா் தொடக்க உரையாற்றினாா்.

கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியா் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் பென்னெட் ஜோஸ், தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா் - ஆசிரியரல்லாத பணியாளா்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலா் கோபிநாத், இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சந்துரு, பணி நிறைவுபெற்ற கல்லூரி பேராசிரியா் சங்கத்தின் மனோகர ஜஸ்டஸ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மூட்டா அமைப்பின் முன்னாள் தலைவா் ராதாகிருஷ்ணன் நிறைவுரையாற்றினாா். மண்டலச் செயலாளா் மகேஷ் நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com