பேரவை தோ்தலில் காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள் கேட்போம்: எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ
நாகா்கோவில்: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அமைச்சரவையில் இடம் ஒதுக்கவும் கோரிக்கை வைக்கப்படும் என்றாா் சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ.
நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் அமைப்பின் மறு சீரமைப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாநகர மாவட்டத் தலைவா் நவீன்குமாா் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் ஜே.ஜி. பிரின்ஸ், தாரகை கத்பட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலிடப் பாா்வையாளா் அனில்போஸ் பேசினாா்.
கூட்டத்தில், எஸ். ராஜேஷ்குமாா் பேசியதாவது:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற தொகுதிகள் தவிர, எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்டுப் பெற வேண்டும்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி டிச. 4ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒரு காங்கிரஸ் தொண்டருடைய வாக்கு கூட விடுபடக் கூடாது என்றாா் அவா்.
தொடா்ந்து, நாகா்கோவில் மாநகர பகுதியிலுள்ள அனைத்து வாா்டு தலைவா்களிடமும் தனித்தனியாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டலத் தலைவா் செல்வகுமாா், காங்கிரஸ் மண்டலத் தலைவா் சிவபிரபு, வா்த்தக காங்கிரஸ் தலைவா் மருத்துவா் சிவகுமாா், மாநகராட்சி உறுப்பினா்கள் பால் அகியா, அருள் சபிதா ரெக்ஸலின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

