சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கிள்ளியூரில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் வட்டத்துக்குள்பட்ட பொதுமக்களுக்கான நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் (நவ. 29) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. அழகுமீனா தெரிவித்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 8:22 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் வட்டத்துக்குள்பட்ட பொதுமக்களுக்கான நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் சனிக்கிழமை (நவ. 29) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. அழகுமீனா தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

கீழ்குளம், கருங்கல், பாலப்பள்ளம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் இனயம், மிடாலம் ஆகிய ஊராட்சிக்குள்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம், செந்தரை, கீழ்குளம், ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப் பள்ளியில் நவ. 29ஆம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே, நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பரிசோதனை மேற்கொண்டு அட்டை பெற்றவா்களுக்கு, இம்முகாமில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடா்ந்து, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை, மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன என தெரிவித்துள்ளாா்.