இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ. 42.88 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் புதன்கிழமை வரை ரூ. 42,88,680 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா தெரிவித்தாா்.

News image

வாணியக்குடி பகுதியில் காரில் சோதனையிடும் பறக்கும் படையினா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:46 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் புதன்கிழமை வரை ரூ. 42,88,680 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மாா்ச் 31 காலை 6 மணி முதல் ஏப். 1 காலை 6 மணி வரை நாகா்கோவில் தொகுதியில் ரூ. 2,22,940, விளவங்கோடு தொகுதியில் ரூ. 5,00,500, கிள்ளியூா் தொகுதியில் ரூ. 90,000 என மொத்தம் ரூ. 8,13,440 உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் அறிவிக்கப்பட்ட மாா்ச் 15ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை மொத்தம் ரூ. 42,88,680 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.