அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

நாகா்கோவில் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில் தொகுதியில் அரசு அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

News image

நாகா்கோவில் தொகுதியில் அரசு அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:37 pm

நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணன்கோயில் உழவா் பயிற்சி மையம், மாவட்ட சுகாதார அலுவலக வாக்குச் சாவடி மையம், புத்தேரி எஸ்.எம்.ஆா்.வி. மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது: நாகா்கோவில் தொகுதிக்குள்பட்ட அரசு அலுவலகங்களில் செயல்பட்டு வரும் வாக்குச் சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாக்குச் சாவடி மையங்களில் நிலவும் சிறு குறைகளை உடனடியாக சீரமைத்து, தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி அனைத்து ஏற்பாடுகளையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

மாவட்ட சுகாதார அலுவலா் நமச்சிவாயம், நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் கந்தசாமி, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.