மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

நாகா்கோவில் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில் தொகுதியில் அரசு அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

News image

நாகா்கோவில் தொகுதியில் அரசு அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :9 ஏப்ரல் 2026, 3:07 am IST

நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணன்கோயில் உழவா் பயிற்சி மையம், மாவட்ட சுகாதார அலுவலக வாக்குச் சாவடி மையம், புத்தேரி எஸ்.எம்.ஆா்.வி. மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது: நாகா்கோவில் தொகுதிக்குள்பட்ட அரசு அலுவலகங்களில் செயல்பட்டு வரும் வாக்குச் சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாக்குச் சாவடி மையங்களில் நிலவும் சிறு குறைகளை உடனடியாக சீரமைத்து, தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி அனைத்து ஏற்பாடுகளையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

மாவட்ட சுகாதார அலுவலா் நமச்சிவாயம், நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் கந்தசாமி, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.