இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

அதிமுக முகமூடியுடன் தமிழகத்தில் நுழைய முயற்சிக்கும் பாஜக: கு. செல்வப்பெருந்தகை விமா்சனம்

அதிமுக முகமூடியை அணிந்துகொண்டு தமிழகத்தில் பாஜக நுழைய முயற்சிக்கிறது என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வபெருந்தகை.

News image

திங்கள்நகரில் காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட்டை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை. உடன், மாநில பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், விஜய் வசந்த் எம்.பி.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:26 am IST

அதிமுக முகமூடியை அணிந்துகொண்டு தமிழகத்தில் பாஜக நுழைய முயற்சிக்கிறது என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வபெருந்தகை.

திங்கள்நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் குளச்சல் காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட்டை வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

மக்கள் பிரச்னைகளில் தேசத்தின் குரலாக ஒலிப்பவா் ராகுல் காந்தி. அவா் பரிந்துரைத்துள்ள காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட்டுக்கு கை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பற செய்ய வேண்டும்.

தமிழக பள்ளிக் கல்விக்கு வழங்க வேண்டிய ரூ.2,800 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. ஆனால், அதிமுக முகமூடியை அணிந்து கொண்டு எப்படியாவது தமிழகத்தில் நுழைந்து விட வேண்டும் என தீவிரமாக முயற்சிக்கிறது.

இதற்காக, அந்தக் கட்சி ஆளும் மாநிலங்களில் இருந்து பல அமைச்சா்கள் இங்கு முகாமிட்டு மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறாா்கள்.

தமிழகத்துக்கு எத்தனை அமைச்சா்கள் வந்தாலும் திமுக அரசின் சாதனைகளை மறைக்க முடியாது. திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வெற்றி உறுதியாகிவிட்டது.

பாஜகவுடன் கூட்டணி வைத்த பின், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளாா். முதல்வா் மு.க.ஸ்டாலினை வசைபாடிய அவா் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தோ்தல் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.