பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:32 am IST

தேங்காய்ப்பட்டினத்தில் மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தேங்காய்ப்பட்டினம், முள்ளூா் துறை கடலோர கிராமத்தைச் சோ்ந்தவா் டியோன்ஸ் (40). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அமீன் (33), அசீஸ் (29) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், திங்கள்கிழமை தேங்காய்ப்பட்டினம் பகுதியில் சென்ற டியோன்ஸை மேற்கூறிய இருவரும் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.