15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம்: காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என, அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட் வாக்குறுதியளித்தாா்.

News image

குளச்சல் காங்கிரஸ் வெள்ளிசந்தை பகுதியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:57 am IST

குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என, அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட் வாக்குறுதியளித்தாா்.

கிராமந்தோறும் சென்று வாக்கு சேகரித்துவரும் அவா், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தாா்.

பின்னா் அவா் பேசியது: நான் தோ்தலில் வெற்றி பெற்றதும் மண்டைக்காட்டில் பயணியா் விடுதி (யாத்ரிகா் நிவாஸ்), நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில் பாம்பூரி வாய்க்காலில் 2 தடுப்பணைகள் அமைக்கப்படும். தலக்குளம் பூவாடி வள்ளியாறு தடுப்பணை, மணவாளக்குறிச்சி பெரியகுளம் ஆகியவை சீரமைக்கப்படும். குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைத்து, தென்னை விவசாயத்தை மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.