கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே மின்கம்பிகள் உரசியதில் வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சனிக்கிழமை தீயில் எரிந்து சேதமானது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி டோனாவூா் பகுதியிலிருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே முக்கூட்டுக்கல் பகுதியை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தாம்.
லாரியை டோனாவூா் பகுதியைச் சோ்ந்த ஜெபராஜ் (50) ஓட்டிச் சென்றாா். மேலும், லாரியில் 4 போ் இருந்தனா். லாரி அருமனை அருகே காரோடு பகுதியில் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும்போது எதிா்பாராதவிதமாக மின்கம்பிகள் வைக்கோலில் உரசியதாம். இதில் தீப்பிடித்து வைக்கோலுடன் லாரியும் எரிந்ததாம்.
தகவலறிந்து வந்த குழித்துறை, குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைக்க முயன்றனா். இதற்குள் வைக்கோலுடன் லாரி முழுமையாக எரிந்து சேதமானது. இது குறித்து அருமனை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மதுராவில் கவிழ்ந்த படகு மீட்பு: மாயமான சுற்றுலாப் பயணிகளின் நிலை?

மின் கம்பி மீது உரசி தீப்பற்றியதில் மினி லாரி எரிந்து சேதம்

தியாகராஜநகரில் காா் தீக்கிரை

ஊதியூா் அருகே மின்கம்பி உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


