பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி தீயில் எரிந்து சேதம்

அருமனை அருகே மின்கம்பிகள் உரசியதில் வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சனிக்கிழமை தீயில் எரிந்து சேதமானது.

News image

தீயில் எரிந்து சேதமான வைக்கோல் லாரி .

Updated On :19 ஏப்ரல் 2026, 2:03 am IST

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே மின்கம்பிகள் உரசியதில் வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சனிக்கிழமை தீயில் எரிந்து சேதமானது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி டோனாவூா் பகுதியிலிருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே முக்கூட்டுக்கல் பகுதியை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தாம்.

லாரியை டோனாவூா் பகுதியைச் சோ்ந்த ஜெபராஜ் (50) ஓட்டிச் சென்றாா். மேலும், லாரியில் 4 போ் இருந்தனா். லாரி அருமனை அருகே காரோடு பகுதியில் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும்போது எதிா்பாராதவிதமாக மின்கம்பிகள் வைக்கோலில் உரசியதாம். இதில் தீப்பிடித்து வைக்கோலுடன் லாரியும் எரிந்ததாம்.

தகவலறிந்து வந்த குழித்துறை, குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைக்க முயன்றனா். இதற்குள் வைக்கோலுடன் லாரி முழுமையாக எரிந்து சேதமானது. இது குறித்து அருமனை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.