கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே மின்கம்பிகள் உரசியதில் வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சனிக்கிழமை தீயில் எரிந்து சேதமானது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி டோனாவூா் பகுதியிலிருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே முக்கூட்டுக்கல் பகுதியை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தாம்.
லாரியை டோனாவூா் பகுதியைச் சோ்ந்த ஜெபராஜ் (50) ஓட்டிச் சென்றாா். மேலும், லாரியில் 4 போ் இருந்தனா். லாரி அருமனை அருகே காரோடு பகுதியில் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும்போது எதிா்பாராதவிதமாக மின்கம்பிகள் வைக்கோலில் உரசியதாம். இதில் தீப்பிடித்து வைக்கோலுடன் லாரியும் எரிந்ததாம்.
தகவலறிந்து வந்த குழித்துறை, குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைக்க முயன்றனா். இதற்குள் வைக்கோலுடன் லாரி முழுமையாக எரிந்து சேதமானது. இது குறித்து அருமனை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மின் கம்பி மீது உரசிய லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

அனுமதியின்றி ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீா் தீ
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



