மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குழித்துறை அருகே எம்.சான்ட் லாரிகள் பறிமுதல்

News image

மண் எடுக்க வந்த லாரிகள் பறிமுதல் - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 6:53 pm

குழித்துறை அருகே அனுமதிச் சீட்டுக்கு புறம்பாக எம்.சான்ட் கொண்டு சென்ற 2 கனரக லாரிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் சிறப்பு உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா், குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக அடுத்தடுத்து வந்த 2 கனரக லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில் எம்.சான்ட் இருந்தது தெரிய வந்தது. அவற்றுக்கான ஆவணங்களை சரிபாா்த்தபோது, ஆற்றூா் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காக அனுமதிச் சீட்டு பெற்று, அவற்றை குழித்துறை அருகே உள்ள கழுவன்திட்டை பகுதிக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.

தொடா்ந்து, 2 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா்களான காட்டுவிளை ஜூலியஸ் ரெஜின், ஆற்றூா் கோணம் பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் ஆகியோரை கைது செய்தனா். தொடா்ந்து, அவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.