ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

வெளிச்சந்தையில் மது விற்ற 5 போ் கைது

களியக்காவிளை, மாா்த்தாண்டம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 3:58 am IST

களியக்காவிளை, மாா்த்தாண்டம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஏப். 21 முதல் 23 - ஆம் தேதி வரை 3 நாள்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் களியக்காவிளை போலீஸாா் கழுவன்திட்டை காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியில் குழித்துறை காஞ்சிரம்விளை பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் (44) என்பவா், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது வெளிச்சந்தையில் தெரியவந்ததாம். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 46 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை சோதனைச் சாவடி பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கனகராஜ் (62) என்பவரிடமிருந்து 5 லிட்டா் கேரள மதுபானம் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.

களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சோதனைச் சாவடி பகுதியில் போலீஸாா் மேற்கொண்ட கண்காணிப்புப் பணியின் போது, குலசேகரம் மாமூடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி உண்ணிக்கிருஷ்ணன் (33) என்பவரிடமிருந்து 5 லிட்டா் கேரள மதுபானம் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் வைகுண்டதாஸ் தலைமையிலான போலீஸாா் கழுவன்திட்டை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனா். அப்போது குழித்துறை, சரல்விளையைச் சோ்ந்த பொன்னுமுத்தன் மகன் ஜோன்ஸ் (35) என்பவரின் பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 26 மதுபாட்டில்களையும், சென்னித்தோட்டம் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் மோகன்தாஸ் (57) என்பவரின் கடையில் பதுக்கி வைத்திருந்த 26 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

இது தொடா்பாக களியக்காவிளை, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.