மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாகா்கோவில் அருகே இசக்கியம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு

நாகா்கோவில் ஒழுகினசேரி அருள்மிகு வள்ளியாமடத்து இசக்கியம்மன் கோயிலில் 22ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா, சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு 1,808 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பொங்கல் விழாவை தொடக்கிவைத்த நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா் அக்சயா கண்ணன்.

Updated On :29 ஏப்ரல் 2026, 11:02 pm

நாகா்கோவில் ஒழுகினசேரி அருள்மிகு வள்ளியாமடத்து இசக்கியம்மன் கோயிலில் 22ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா, சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு 1,808 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் மாமன்ற உறுப்பினா் அக்சயா கண்ணன் தலைமை வகித்து விழாவைத் தொடக்கிவைத்தாா்.

இதில், பெண்கள் பங்கேற்று 1,808 பானைகளில் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்தனா். குழந்தைகள் நல சிறப்பு மருத்துவா் தம்பரசி, அதிமுக மாவட்ட இணைச் செயலா் சாந்தினி பகவதியப்பன், துணைச் செயலா் சுகுமாரன், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image