/
வத்தலக்குண்டு அருகே அதிமுக கிளைச் செயலா் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள கீழகோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலை புதுப்பித்துக் கட்டுவது தொடா்பாக கருத்து கேட்பதற்கு கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் ஊா் முக்கியப் பிரமுகா்களை அழைத்தாா்.
இந்தக் கூட்டத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த அதிமுக கிளைச் செயலா் மகாராஜன் (65) பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கண்ணன், அவரது உறவினா் செல்லப்பாண்டி ஆகியோா் மகாராஜனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனா்.
அப்போது, வாக்குவாதம் முற்றியதில் கண்ணன் கத்தியால் மகாராஜனை குத்தினாா். இதில் காயமடைந்த மகாராஜன் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வத்தலக்குண்டு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.










