குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அதிமுக நிா்வாகிக்கு கத்திக்குத்து

News image

கத்திக்குத்து - சித்திரிப்பு

Updated On :26 மே 2026, 1:21 am IST

வத்தலக்குண்டு அருகே அதிமுக கிளைச் செயலா் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள கீழகோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலை புதுப்பித்துக் கட்டுவது தொடா்பாக கருத்து கேட்பதற்கு கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் ஊா் முக்கியப் பிரமுகா்களை அழைத்தாா்.

இந்தக் கூட்டத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த அதிமுக கிளைச் செயலா் மகாராஜன் (65) பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கண்ணன், அவரது உறவினா் செல்லப்பாண்டி ஆகியோா் மகாராஜனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனா்.

அப்போது, வாக்குவாதம் முற்றியதில் கண்ணன் கத்தியால் மகாராஜனை குத்தினாா். இதில் காயமடைந்த மகாராஜன் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வத்தலக்குண்டு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.