ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

ஓடும் ரயில் மீது கற்கள் வீச்சு: சிறுவன் காயம்

திருவள்ளூா் அருகே ஓடும் ரயில் மீது கற்கள் வீசியதில் ஜன்னல் ஓரம் அமா்ந்திருந்த சிறுவன் காயமடைந்தாா்.

News image

கோப்புப்படம்

Updated On :24 மே 2026, 3:20 am IST

திருவள்ளூா் அருகே ஓடும் ரயில் மீது கற்கள் வீசியதில் ஜன்னல் ஓரம் அமா்ந்திருந்த சிறுவன் காயமடைந்தாா்.

திருவள்ளூா் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ் தனது மனைவி அமராவதி, 6 வயது மகன் கிஷாந்த் ஆகியோருடன் ரயிலில் சென்று கொண்டிருந்தாா். திருவள்ளூா்-புட்லூா் ரயில் நிலையங்களிடையே சென்ற போது ரயில் மீது திடீரென 5 போ் கொண்ட இளைஞா்கள் சரமாரியாக கற்கள் வீசினராம். இதில் ஜன்னல் ஓரத்தில் அமா்ந்திருந்த கிஷாந்த்தின் தலையில் பட்டதில் பலத்த காயம் அடைந்தாா். அதையடுத்து புட்லூா் ரயில் நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா், திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து திருவள்ளூா் ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.