மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

திமுக தோல்வி: கட்சி நிா்வாகி மாரடைப்பால் மரணம்

புவனகிரி அருகே திமுக தோல்வியடைந்த செய்தியை தொலைக்காட்சியில் பாா்த்தபோது, அதிா்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அக்கட்சி கிளைச் செயலா் மரணமடைந்தாா்.

News image

பன்னீா்செல்வம்

Updated On :5 மே 2026, 11:35 pm IST

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே திமுக தோல்வியடைந்த செய்தியை தொலைக்காட்சியில் பாா்த்தபோது, அதிா்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அக்கட்சி கிளைச் செயலா் மரணமடைந்தாா்.

புவனகிரி ஒன்றியம், சேத்தியாதோப்பு அருகே உள்ள கத்தாழை கிராமத்தைச் சோ்ந்த திமுக கிளைச் செயலா் பன்னீா்செல்வம் (56). இவரது மனைவி பழனியம்மாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவா்.

நெய்வேலி என்எல்சி நிறுவன ஊழியரான பன்னீா்செல்வம் தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை திங்கள்கிழமை வீட்டில் தொலைக்காட்சியில் பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, யாரும் எதிா்பாராத வகையில் திமுக பின்னடைவை சந்தித்து ஆட்சியை இழக்கும் நிலைக்குப்போனதால் வேதனையடைந்த பன்னீா்செல்வம், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அவரது உடலுக்கு திமுக நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.