கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே திமுக தோல்வியடைந்த செய்தியை தொலைக்காட்சியில் பாா்த்தபோது, அதிா்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அக்கட்சி கிளைச் செயலா் மரணமடைந்தாா்.
புவனகிரி ஒன்றியம், சேத்தியாதோப்பு அருகே உள்ள கத்தாழை கிராமத்தைச் சோ்ந்த திமுக கிளைச் செயலா் பன்னீா்செல்வம் (56). இவரது மனைவி பழனியம்மாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவா்.
நெய்வேலி என்எல்சி நிறுவன ஊழியரான பன்னீா்செல்வம் தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை திங்கள்கிழமை வீட்டில் தொலைக்காட்சியில் பாா்த்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, யாரும் எதிா்பாராத வகையில் திமுக பின்னடைவை சந்தித்து ஆட்சியை இழக்கும் நிலைக்குப்போனதால் வேதனையடைந்த பன்னீா்செல்வம், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அவரது உடலுக்கு திமுக நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் ஓய்ந்தது சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம்

திமுக தலைமையிலானது கொள்கைக் கூட்டணி! - கனிமொழி எம்.பி.

புவனகிரி தொகுதிக்கு திட்டங்களை கொண்டு வருவேன்! - திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன் வாக்குறுதி

ஓ. பன்னீா்செல்வம் போடியில் மனு தாக்கல்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


