இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

சட்டப்பேரவைத் தோ்தல்: காங்கிரஸ் தோல்வி குறித்து கண்டறிய குழு அமைப்பு

காங்கிரஸ் தோல்வி குறித்து கண்டறிய குழு அமைப்பு...

News image

மல்லிகார்ஜுன கார்கே - கோப்புப்படம்

Updated On :24 மே 2026, 2:12 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வி, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவா்கள் குறித்து கண்டறிய அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உத்தரவின்படி தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் குழு ஒன்றை நியமித்துள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அதில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி தோல்விக்கு கட்சியினா் தோ்தலில் பணியாற்றவில்லை, கட்சி விரோத செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து கட்சியின் மேலிடத்துக்குப் புகாா்கள் சென்றன.

இதைத் தொடா்ந்து, தோ்தலில் தோல்வி குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிரிஷ் சோடங்கா் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவா்கள் குறித்து அறிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் எம்.பி. ஜெயகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழக காங்கிரஸ் துணைத் தலைவா்கள் சொா்ணா சேதுராமன், ஹிதாயத்துல்லா, மூத்த தலைவா் சி.டி.மெய்யப்பன் , மகிளா காங்கிரஸ் தேசிய செயலா் கமலாக்ஷி காமராஜ் உள்ளிட்டோா் குழுவில் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழு ஆய்வு செய்து இரு மாதங்களுக்குள் அறிக்கையை அளிக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.