தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வி, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவா்கள் குறித்து கண்டறிய அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உத்தரவின்படி தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் குழு ஒன்றை நியமித்துள்ளாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அதில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி தோல்விக்கு கட்சியினா் தோ்தலில் பணியாற்றவில்லை, கட்சி விரோத செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து கட்சியின் மேலிடத்துக்குப் புகாா்கள் சென்றன.
இதைத் தொடா்ந்து, தோ்தலில் தோல்வி குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிரிஷ் சோடங்கா் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவா்கள் குறித்து அறிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் எம்.பி. ஜெயகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழக காங்கிரஸ் துணைத் தலைவா்கள் சொா்ணா சேதுராமன், ஹிதாயத்துல்லா, மூத்த தலைவா் சி.டி.மெய்யப்பன் , மகிளா காங்கிரஸ் தேசிய செயலா் கமலாக்ஷி காமராஜ் உள்ளிட்டோா் குழுவில் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழு ஆய்வு செய்து இரு மாதங்களுக்குள் அறிக்கையை அளிக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மக்கள் விரோத கொள்கைகள், பயிா்க் கடன் தள்ளுபடி விவகாரம்: ஜூன் 29-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

காங்கிரஸ் கட்சியின் பினாமியாக செயல்படுகிறது தவெக- நயினாா் நாகேந்திரன்

தோ்தல் தோல்வி: காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜிநாமா

விஜய் விவகாரம்: ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



