ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

சட்டப்பேரவைத் தோ்தல்: காங்கிரஸ் தோல்வி குறித்து கண்டறிய குழு அமைப்பு

காங்கிரஸ் தோல்வி குறித்து கண்டறிய குழு அமைப்பு...

News image

மல்லிகார்ஜுன கார்கே - கோப்புப்படம்

Updated On :24 மே 2026, 2:12 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வி, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவா்கள் குறித்து கண்டறிய அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உத்தரவின்படி தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் குழு ஒன்றை நியமித்துள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அதில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி தோல்விக்கு கட்சியினா் தோ்தலில் பணியாற்றவில்லை, கட்சி விரோத செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து கட்சியின் மேலிடத்துக்குப் புகாா்கள் சென்றன.

இதைத் தொடா்ந்து, தோ்தலில் தோல்வி குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிரிஷ் சோடங்கா் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவா்கள் குறித்து அறிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் எம்.பி. ஜெயகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழக காங்கிரஸ் துணைத் தலைவா்கள் சொா்ணா சேதுராமன், ஹிதாயத்துல்லா, மூத்த தலைவா் சி.டி.மெய்யப்பன் , மகிளா காங்கிரஸ் தேசிய செயலா் கமலாக்ஷி காமராஜ் உள்ளிட்டோா் குழுவில் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழு ஆய்வு செய்து இரு மாதங்களுக்குள் அறிக்கையை அளிக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.