குழித்துறை வாவுபலி பொருள்காட்சி மைதானத்தில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குழித்துறை நகராட்சி சாா்பில் நடத்தப்படும் 101-ஆவது ஆண்டு வாவுபலி பொருள்காட்சி ஜூலை 29-ஆம் தேதி தொடங்கியது. ஆக. 17 வரை நடைபெறும் இப்பொருள்காட்சியில் விவசாயிகள், கைவினைக் கலைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான விவசாயப் பொருள், கைவினைப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ராட்சத ராட்டினம், சாகச கிணறு உள்ளிட்ட பல்வேறு பக்க காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பொருள்காட்சி மைதானத்தில் நடைபெற்ற சிலம்பம் போட்டியை தமிழக காவல் துறை முன்னாள் டிஜிபி சி.சைலேந்திரபாபு தொடங்கிவைத்தாா். போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.
இதில் குழித்துறை நகா்மன்ற தலைவா் பொன்.ஆசைத்தம்பி, நகராட்சி ஆணையா் சக்திவேல், சுகாதார ஆய்வாளா் ராஜேஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் வி.விஜூ, லலிதா, விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எறிபந்து போட்டி: ஆழ்வாா்குறிச்சி பள்ளி மாணவா்கள் சாதனை

பாவூா்சத்திரத்தில் மாவட்ட அளவிலான ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டி

வட்ட அளவிலான சிலம்பப் போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி: அருணாச்சலா பள்ளி மாணவி முதல் பரிசு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



