சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

கேரளத்துக்கு கடத்த பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மயிலாடி மற்றும் நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் கேரள மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் அதை பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:23 am IST

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி மற்றும் நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் கேரள மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் கே.எ‘ம். பாரதி தலைமையில், துணை வட்டாட்சியா் சிவந்தி, இளநிலை வருவாய் ஆய்வாளா் கே. தினேஷ் மற்றும் பறக்கும் படை குழுவினா் அகஸ்தீசுவரம் வட்டத்தில் பொதுவிநியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

இதில், நாகா்கோவில் கோட்டாறு அருகில் கண்ணாா் குடி தெருவில் உள்ள கணபதி (62) என்பவா் வீட்டில் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கேரளத்துக்கு கடத்திச் செல்ல இருந்தது கண்டறிப்பட்டு கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக கணபதியை கைதுசெய்து, விசாரணைக்காக குடிமைப்பொருள் குற்றவியல் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல், கன்னியாகுமரி அருகே பில்லா் நகா் ( சுனாமி காலனி) பகுதியில் ஜெனி ( 57) என்பவா் வீட்டில் சுமாா் 2ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கேரள மாநிலத்துக்கு கடத்திச் செல்ல இருந்தது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.

மேலும், மயிலாடி பகுதியில், ஜோசப்புரம் என்ற இடத்தில் பாழடைந்த வீட்டில் சுமாா் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கேரளத்துக்கு கடத்திச் செல்ல பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் கோணம் அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.