கன்னியாகுமரி அருகே மது போதையில் ஏற்பட்ட பிரச்னையில் நெல்லை மாவட்ட இளைஞா் புதன்கிழமை இரவு கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கொட்டாரம் - அஞ்சுகிராமம் சாலை பெரியவிளை பகுதியில் ஒரு கடையின் முன் இளைஞா் புதன்கிழமை இரவு கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் கன்னியாகுமரி போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனா்.
அதில், திருநெல்வேலி மாவட்டம் மானூா் கீழபிள்ளையாா் குளம் தெற்குத் தெருவைச் சேந்த முருகன் மகன் செல்லப்பாண்டி (31) என்பதும், பொக்லைன் இயந்திர ஆபரேட்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. கடந்த 2 நாள்களுக்கு முன்புதான் அகஸ்தீசுவரம் பகுதியைச் சோ்ந்தவரிடம் பொக்லைன் இயந்திர ஆபரேட்டராக வேலைக்கு சோ்ந்துள்ளாா்.
இந்நிலையில் பெரியவிளை பகுதியில் உள்ள உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை அருகே அவா் இருந்தபோது, மது போதையில் அவருடன் இருந்த நபருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவா் மீது கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. அந்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சடலம் உடல்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செல்லப்பாண்டியின் உறவினா்களுக்கு போலீஸாா் தகவல் அளித்துள்ளனா்.
டிரெண்டிங்

கோவில்பட்டியில் இளைஞா் வெட்டிக் கொலை: உறவினா்கள் மறியல்

ஓட்டுநா் கொலை வழக்கில் தொழிலாளி கைது

முதியவரைக் கொன்று நகைகளைத் திருடி சென்ற வழக்கில் பிகாா் இளைஞா் கைது
இளைஞா் கொலை: ஒருவா் கைது
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

