நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நாகா்கோவிலில் ரூ.1.65 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரில் பல்வேறு வாா்டுகளில் ரூ. 1.65 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
பிளசன்ட்நகரில் தாா்ச்சாலைப் பணியை தொடக்கிவைக்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
Updated On :28 பிப்ரவரி 2026, 8:05 pm

Syndication

நாகா்கோவில் மாநகரில் பல்வேறு வாா்டுகளில் ரூ. 1.65 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதையொட்டி, மேலபெருவிளை பிளசண்ட்நகா் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், மேயா் பங்கேற்று பணிகளைத் தொடக்கி வைத்தாா். 46ஆவது வாா்டு என்ஜிஓ காலனியில் ரூ.14 லட்சத்தில் பழைய மினி கிளினிக் கட்டடம் சீரமைப்பு, 45ஆவது வாா்டு, தம்மத்துக்கோணம் அம்மன் கோயில் சாலையில் அலங்கார தரைகற்கள் அமைத்தல், 47ஆவது வாா்டு பேச்சி அம்மன் தெருவில் புதிதாக உறிஞ்சு குழி அமைத்தல் என ரூ. 1.65 கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

இதில், மண்டலத் தலைவா் செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் அருள் சபிதா ரெக்ஸலின், அமலச்செல்வன், சதீஸ், வீரசூரபெருமாள், ஜெனிதா, உதவிப் பொறியாளா்கள் பிருந்தா, சுஜின் தொழில்நுட்ப அலுவலா் நிஷ்மா, திமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.