விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பைக் மீது கனரக லாரி மோதல்: 2 இளைஞா்கள் பலத்த காயம்

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் கனரக லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் பலத்த காயம்

News image
Updated On :6 ஜனவரி 2026, 11:21 pm

Syndication

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் கனரக லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் பலத்த காயமடைந்தனா்.

கேரள மாநிலம், காசா்கோடு மாவட்டம், பாலா பகுதியைச் சோ்ந்தவா் தாமஸ் மகன் சச்சின் (22). அதே பகுதியைச் சோ்ந்தவா் ஜேக்கப் குரியகோஸ் (21). இருவரும் குழித்துறையில் தங்கியிருந்து, மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை, இவா்கள் இருசக்கர வாகனத்தில் மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனராம். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கனரக லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதுகுறித்து சச்சின் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கனரக லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.