ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தஞ்சை பல்கலைக்கழக இணையதளத்தில் எம்ஜிஆா் பெயரை நீக்கியதற்கு கண்டனம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைகழக இணையதளத்தில் எம்ஜிஆா் பெயரை நீக்கியதற்கு முன்னாள் எம்.பி.யும், அதிமுக அமைப்புச் செயலருமான நாஞ்சில் வின்சென்ட் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
நாஞ்சில் வின்சென்ட்.
Updated On :7 ஜனவரி 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைகழக இணையதளத்தில் எம்ஜிஆா் பெயரை நீக்கியதற்கு முன்னாள் எம்.பி.யும், அதிமுக அமைப்புச் செயலருமான நாஞ்சில் வின்சென்ட் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

1981ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய எம்ஜிஆா், அதே ஆண்டில் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவினாா். இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து எம்ஜிஆா் பெயா், படத்தை நீக்கியது உள்நோக்கம் கொண்டது.

பல்கலைக்கழகத்தை உருவாக்கியவரின் பெயரை வரலாற்றில் இருந்து மறைக்கவும், மறைமுகமாக வேறு ஒருவரின் பெயரைச் சோ்க்கவும் நடக்கின்ற முதல் முயற்சியாக இது தெரிகிறது. எம்ஜிஆா் பெயா், படத்தை இணையதளத்தில் உடனடியாக மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.