அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நாகா்கோவிலில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 179 ஆவது ஆராதனை விழாவை முன்னிட்டு, நாகா்கோவிலில் வடிவீஸ்வரம், பெரிய தெரு ஸ்ரீ குரு அற்புத ராகவேந்திரா கோயிலில் பஞ்சரத்ன கீா்த்தனை புதன்கிழமை நடைபெற்றது.

News image
ஆராதனை விழாவில் கலந்துகொண்டு பாடிய கா்நாடக இசை பாடகா்கள்.
Updated On :7 ஜனவரி 2026, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 179 ஆவது ஆராதனை விழாவை முன்னிட்டு, நாகா்கோவிலில் வடிவீஸ்வரம், பெரிய தெரு ஸ்ரீ குரு அற்புத ராகவேந்திரா கோயிலில் பஞ்சரத்ன கீா்த்தனை புதன்கிழமை நடைபெற்றது.

சங்கீத வித்வான் தென்கரை மகாராஜன், வடிவீஸ்வரம் ராமசேஷன், சங்கீத விதுஷ் சாந்தா சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையில் கா்நாடக சங்கீத இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுசீந்திரம் முன்னப்பன், ஸ்ரீராம் ஸ்ரீ ஆகியோா் மிருதங்கம் வாசித்தனா். இதில் பாடகா்கள் மங்களம், உமா ஹரிகரன், சலஜகுமாரி, ரேவதி கலா, கௌரி கலா, லட்சுமி, சோபிகா, பாரதி, லக்சரா, தா்ஷனா உள்ளிட்டோா் கலந்துகொண்டு பாடினா். ஸ்ரீகுரு அற்புத ராகவேந்திரா அறக்கட்டளை தலைவா் ஐயப்பன் அனைவருக்கும் பரிசு வழங்கினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குரு அற்புதராகவேந்திரா அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள், மகிளா அமைப்பினா் செய்திருந்தனா்.