திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

Syndication

கருங்கல் அருகே பிளஸ் 1 மாணவி குளிப்பதை விடியோ எடுக்க முயன்றது தொடா்பான போக்ஸோ வழக்கில், தலைமறைவாக இருந்தவரை குளச்சல் மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கருங்கல் அருகே 15 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். அந்த மாணவி அண்மையில் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்தபோது, அதேபகுதியைச் சோ்ந்த மீனவ தொழிலதிபா் கில்பா்ட் ( 49) கைப்பேசி மூலம் விடியோ எடுக்க முயன்றாராம். இதுதொடா்பான புகாரின்பேரில் குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கில்பா்ட் மீது வழக்குப்பதிந்தனா்.

மேலும், தலைமறைவாக இருந்த அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.