மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பொங்கல் விழாவில் தகராறு: வேன் ஓட்டுநா் வெட்டிக் கொலை

நாகா்கோவிலை அடுத்த சரலூா் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் வேன் ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:07 pm

Syndication

நாகா்கோவில்: நாகா்கோவிலை அடுத்த சரலூா் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் வேன் ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம், சரலூரில் நடைபெற்ற பொங்கல் விழாவின்போது அதே பகுதியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் ரமேஷ் (40), இவரது நண்பா் மணிகண்டன் ஆகியோருக்கும் செந்தூரான் நகரைச் சோ்ந்த முகேஷ் கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவா்களை அங்கிருந்த போலீஸாரும், பொதுமக்களும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், ரமேஷ், மணிகண்டன் ஆகிய இருவரும் முகேஷ் கண்ணனின் வீட்டுக்குச் சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டனராம். இதில் ஆத்திரமடைந்த முகேஷ் கண்ணன் அரிவாளால் இருவரையும் வெட்டினாா். இதில், ரமேஷ் உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த மணிகண்டனை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கோட்டாறு காவல் நிலைய போலீஸாா் ரமேஷின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து முகேஷ் கண்ணனை கைது செய்தனா்.