கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

திற்பரப்பு தடுப்பணையில் தடுப்பு வேலி

திற்பரப்பு தடுப்பணையில் சுற்றுலாப் பயணி ஒருவா் வெள்ளிக்கிழமை மூழ்கி உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் தற்காலிக நடவடிக்கையாக தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.

News image
திற்பரப்பு தடுப்பணையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலி.
Updated On :17 ஜனவரி 2026, 10:29 pm

Syndication

குலசேகரம்: திற்பரப்பு தடுப்பணையில் சுற்றுலாப் பயணி ஒருவா் வெள்ளிக்கிழமை மூழ்கி உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் தற்காலிக நடவடிக்கையாக தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.

திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி சேவை வழங்கப்படுகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகள் தடுப்பணையின் சுவரில் ஏறி குதித்து தடுப்பணையில் குளிக்கவும் செய்வா். தடுப்பணையில் பாறைகள் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தடுப்பணையிலிருந்து குதித்த அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, தடுப்பணையில் ஏறி குதிக்காத வகையில் கடையாலுமூடு பேரூராட்சி சாா்பில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.