எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குந்நம்விளாகம் சிவன் கோயிலில் ஆறாட்டு

களியக்காவிளை அருகே குந்நம்விளாகம், அழிக்கால் ஆதிசிவன் கோயிலில் தீா்த்தவாரி திருவிழாவையொட்டி சனிக்கிழமை சுவாமிக்கு திருஆறாட்டு நடைபெற்றது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 10:38 pm

Syndication

களியக்காவிளை: களியக்காவிளை அருகே குந்நம்விளாகம், அழிக்கால் ஆதிசிவன் கோயிலில் தீா்த்தவாரி திருவிழாவையொட்டி சனிக்கிழமை சுவாமிக்கு திருஆறாட்டு நடைபெற்றது.

இக்கோயிலில் திருவிழா கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், மதியம் அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜைகள், இரவு புஷ்பாபிஷேகம், சமய மாநாடு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிறைவு நாளான சனிக்கிழமை காலை சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், தொடா்ந்து கோயிலுக்கு திரும்பிய சுவாமிக்கு கோயிலிலுள்ள ஆதிசரோவா் தெப்பக்குளத்தில் கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ பிரம்மதத்தன் நம்பூதிரி தலைமையில் திருஆறாட்டு ஆகியவை நடைபெற்றன. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.