தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மாா்த்தாண்டம் அருகே கோயிலில் வெள்ளி முக அங்கி திருட்டு

மாா்த்தாண்டம் அருகே இசக்கியம்மன் கோயிலில் வெள்ளி முக அங்கியைத் திருடியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 10:30 pm

Syndication

மாா்த்தாண்டம் அருகே இசக்கியம்மன் கோயிலில் வெள்ளி முக அங்கியைத் திருடியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே ஆயிரம்தெங்கு, தாணிவிளை பகுதியில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை சமய வகுப்பு நடத்துவதற்காக பக்தா்கள் வந்தனா்.

அப்போது, அலுவலக அறை திறந்திருந்ததாம். கோயில் நிா்வாகிகள் வந்து பாா்த்தபோது, அம்மனுக்கு திருவிழா காலங்களில் அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான வெள்ளி முக அங்கி திருடுபோனது தெரியவந்தது.

கோயில் கமிட்டி தலைவா் நாகப்பன் (55) அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.