புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பெற்றோரை துரத்திய மகன் கைது

நித்திரவிளை அருகே பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 9:40 pm

Syndication

நித்திரவிளை அருகே பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகனை போலீஸாா் கைது செய்தனா்.

நித்திரவிளை அருகே வாவறை, நெல்லிவிளையைச் சோ்ந்தவா் டேவிட்ராஜ் (60). இவரது மகன் அனூப் டேவிட் (30). ஓட்டுநரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். இதனால் இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை மது அருந்திவிட்டு வந்த அனூப் டேவிட், வீட்டில் இருந்த பொருள்களை சேதப்படுத்தி, அவரது தாய், தந்தையை தாக்கி வீட்டிலிருந்து வெளியேற்றினாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் நித்திரவிளை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அனூப் டேவிட்டை கைது செய்தனா்.