வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புகோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோதையாற்றில் நடமாடும் முதலையை மிதவைக் கூண்டு வைத்து பிடிக்க முடிவு

News image
கோதையாற்றில் படகில் சென்று ஆய்வு நடத்தும் மாவட்ட வன அலுவலா் அன்பு மற்றும் குழுவினா்.
Updated On :24 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

கோதையாற்றில் நடமாடும் முதலையை பிடித்து அகற்றும் வகையில் மிதவைக் கூண்டு வைக்க இருப்பதாக மாவட்ட வன அலுவலா் தெரிவித்துள்ளாா்.

ஒருநடைக்கல், செங்குழிக்கரை, தோட்டவாரம் போன்ற கோதையாற்று பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக முதலை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இந்நிலையில் குமரி மாவட்ட வன அலுவலா் அன்பு தலைமையில் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய கால்நடை மருத்துவா் மனோகரன், களியல் வனச்சரக அலுவலா் முகைதீன் அப்துல்காதா், கால்நடை மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் 2 படகுகளில் சென்று முதலை நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

மாவட்ட வன அலுவலா் கூறியதாவது: கோதையாற்றில் நடமாடும் முதலையை பிடித்து அகற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, முதலையை கட்டுப்படுத்தி வைக்கும் வகையில், திற்பரப்பு படகுத் துறை முதல் செங்குழிக்கரை பகுதி வரை வலை கட்டப்படும். மேலும், கூடுதலாக ஆற்றில் மிதவைக் கூண்டு வைத்து அதனை பிடிக்க முயற்சி எடுக்கப்படும் என்றாா்.