எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோதையாற்றில் முதலையைப் பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினா்

News image
ஆற்றில் வலை கட்டும் வனத்துறையினா்.
Updated On :25 ஜனவரி 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

திற்பரப்பு அருகே கோதையாற்றில் நடமாடும் முதலையை குறிப்பிட்ட இடத்தில் கட்டுப்படுத்திப் பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

கோதையைற்றில் திற்பரப்பு, கடையாலுமூடு பகுதிகளுக்கிடையே முதலை நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், மிதக்கும் கூண்டு வைத்து முதலையை பிடிக்க வனத்துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

இதற்காக திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி நடைபெறும் எல்லைப் பகுதிக்கும், கடையாலுமூடு அருகே ஒருநடைக்கல் பகுதிக்கும் இடையே முதலையை கட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளனா்.

இதையடுத்து, ஆற்றுப் பகுதியில் வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை வலைகளைக் கட்டினா். இப்பணியில் களியல் வனச்சரக அலுவலா் முகைதீன் அப்துல் காதா் தலைமையிலான வனத்துறையினா் ஈடுபட்டனா். இப்பணிகளை உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் ஸ்ரீவல்சன் ஆய்வு செய்தாா்.