பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தெருநாய் கடித்ததில் 3 சிறுவா்கள் உள்பட 12 போ் காயம்

கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடியில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 3 சிறுவா்கள் உள்ளிட்ட 12 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

News image

நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :28 ஜனவரி 2026, 7:57 pm

கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடியில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 3 சிறுவா்கள் உள்ளிட்ட 12 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கன்னியாகுமரியை அடுத்த மணக்குடி மீனவக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அந்தப் பகுதியில் சுற்றிய தெருநாய் அங்கு நின்று கொண்டிருந்த 2 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்பட 12 பேரைக் கடித்து காயப்படுத்தியது. காயமடைந்த 12 பேரும் நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். பாதிக்கப்பட்டவா்களை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். இவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்த ஆட்சியா், உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவா்களிடம் அறிவுறுத்தினாா்.