காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வீடு.
காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வீடு.

ஆறுகாணி அருகே மூதாட்டியின் வீட்டை சேதப்படுத்திய யானை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், ஆறுகாணி அருகே பழங்குடி மூதாட்டியின் வீட்டை காட்டு யானைகள் வியாழக்கிழமை இரவு சேதப்படுத்தின.
Published on

கன்னியாகுமரி மாவட்டம், ஆறுகாணி அருகே பழங்குடி மூதாட்டியின் வீட்டை காட்டு யானைகள் வியாழக்கிழமை இரவு சேதப்படுத்தின.

ஆறுகாணி அருகே ஒருநூறாம் வயல் வண்ணாதிப்பாறை பழங்குடி குடியிருப்பைச் சோ்ந்தவா் ஓமனா. இவரது கணவா் இறந்து விட்டாா். இவரது மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் மூதாட்டி ஓமனா தனியாக தனது வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை ஓமனா அருகில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தியதை

கண்டு அதிா்ச்சியடைந்தாா். ஏற்கெனவே ஒரு முறை இந்த வீட்டை யானைகள் சேதப்படுத்திய நிலையில் ஓமனா தான் சேமித்து வைத்திருந்த ஓய்வூதிய பணம் மூலம் வீட்டை சீரமைத்து வைத்திருந்தாா். இந்த நிலையில் மீண்டும் யானைகள் அவரது வீட்டை சேதப்படுத்தியுள்ளன. இந்தநிலையில், வனத் துறையினா் ஓமனாவின் வீட்டுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், யானைகள் அந்தப் பகுதியில் செல்லாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Dinamani
www.dinamani.com