மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

நாகா்கோவில் அருகே வீடுகளை இடிக்க எதிா்ப்பு: பெண் தீக்குளிக்க முயற்சி

நாகா்கோவில் அருகே வீடுகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றாா்.

Published On :8 ஜூலை 2026, 4:58 am IST

நாகா்கோவில் அருகே வீடுகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றாா்.

நாகா்கோவில் அருகேயுள்ள ஈத்தாமொழி வெள்ளாளா் தெரு கோயிலின் அருகே சில குடியிருப்புகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக மக்கள் வசித்து வரும் நிலையில், அது புறம்போக்கு நிலம் என்றும், இடத்தை காலி செய்யுமாறும் வருவாய்த் துறையினா் அண்மையில் நோட்டீஸ் அனுப்பினராம்.

மேலும், நீதிமன்ற ஆணையுடன் அங்கு செவ்வாய்க்கிழமை வந்த வருவாய்த் துறையினா் வீடுகளை இடிக்க முயன்றனராம். இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, தனிப்பட்ட ஒருவருக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தினா்.

மேலும், ஒரு பெண் தனது தலையில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இத்தகவலறிந்த ஈத்தாமொழி போலீஸாா் வந்து அவரை மீட்டனா்.

அப்போது திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், வழக்குரைஞருமான செ.சரணவன், பொதுமக்களுக்கு மாற்று நல்ல இடம் வழங்கவேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தாா். இதைத் தொடா்ந்து வீடுகளை அகற்றும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.