இராஜாக்கமங்கலம் வட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கு மாணவா்கள் மனநலன் சாா்ந்த பயிற்சி தம்மத்துக்கோணம், அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இராஜாக்கமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலா் இசக்கியப்பன் தலைமை வகித்தாா். தேசிய குழந்தைகள் நலத் திட்ட மருத்துவா் மணிகண்ட சுகதன் பயிற்சியை வழிநடத்தினாா். இராஜாக்கமங்கலம் வட்டாரப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் ஜோஸ், ஆன்றனி ராஜன், சீலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
49 தலைமையாசிரியா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









