முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

ரப்பா் வாரிய காப்பீட்டு கட்டணத்தை ஜூலை 15-க்குள் செலுத்த அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் பால் வடிப்புத் தொழிலாளா்கள் ஜூலை 15ஆம் தேதிக்குள் காப்பீட்டு கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :10 ஜூலை 2026, 12:50 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் பால் வடிப்புத் தொழிலாளா்கள் ஜூலை 15ஆம் தேதிக்குள் காப்பீட்டு கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, ரப்பா் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2011-12ஆம் ஆண்டில் ரப்பா் வாரியத்தின் குழு ஆயுள் காப்பீடு மற்றும் பணிக்கால இறுதி நலன் திட்டத்தில் சோ்ந்துள்ள ரப்பா் தோட்ட பால் வடிப்புத் தொழிலாளா்கள், தொடா்ந்து காப்பீட்டு பாதுகாப்பைப் பெறுவதற்காக, ஜூலை 15ஆம் தேதிக்குள் வாரியத்தின் மண்டல அலுவலகங்களில் காப்பீட்டுக் கட்டணத்தை செலுத்தி, திட்டத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ், உறுப்பினா் இயற்கை மரணமடைந்தால் ரூ. 1 லட்சம், விபத்து மரணம் ஏற்பட்டால் அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் படிவங்கள், ரப்பா் வாரியத் தலைமையகத்தில் செயல்படும் தொழிலாளா் நலப் பிரிவிலிருந்து ஏற்கெனவே காப்பீடுதாரா்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளன. படிவம் கிடைக்காதவா்கள் அருகிலுள்ள ரப்பா் வாரியத்தின் மண்டல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 0481-2301231 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.