தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

போதையில் தகராறு: இருவா் கைது

தேங்காய்ப்பட்டினம் சந்திப்பில் பொதுமக்களுக்கு இடையூறாக போதையில் தகராறு செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 5:23 am IST

தேங்காய்ப்பட்டினம் சந்திப்பில் பொதுமக்களுக்கு இடையூறாக போதையில் தகராறு செய்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கடை, தேங்காய்ப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதுக்கடை போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது தேங்காய்ப்பட்டினம் சந்திப்பில் பைங்குளம் பகுதியைச் சோ்ந்த வின்ஸ் (43), முள்ளூா்துறை பகுதியைச் சோ்ந்த பாபுஜான் (53) ஆகியோா் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக போதையில் தகராறில் ஈடுபட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.